Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கராத்தே போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வாழ்த்து 

நவம்பர் 08, 2023 08:06

நாமக்கல்: இந்திய பவர் சொடோகன் கராத்தே அசோசியேசன் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி தோமையார் மக்கள் மன்றம் திருச்சி இருக்கலூர் கைக்காட்டியில் நடைபெற்றது. இப் போட்டியில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

அதில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில்  கலந்து கொண்டவர்களில் 15 மாணவ,  மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர்.

பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவ மாணவிகளை பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ இதுபோன்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவதுடன் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென  வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் கண்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்